நாளைய நாளுக்கான மின்வெட்டு தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு!
புதிய இணைப்பு
நாளை மின் தடை இருக்காது என்று இலங்கை மின்சார சபை(CEB) அறிவித்துள்ளது.
தற்போதைய மின்சார தேவையை நிர்வகிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வாரியம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
நாடு முழுவதும் இன்றையதினமும் ஒன்றரை மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மாலை, 03.30 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் 4 பிரிவுகளின் கீழ் இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தேசிய மின்சார கட்டமைப்புக்கு 900 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் துண்டிக்கப்படும் வலயங்கள்
இதன்படி, A, B, C, D வலயங்களில் பிற்பகல் 3:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஒன்றரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்.

E, F, G, H, U, மற்றும் V ஆகிய வலயங்களில் மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை ஒன்றரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
I, J, K, L, P, மற்றும் Q ஆகிய வலயங்களில் மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை ஒன்றரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்.

R, S,T, W ஆகிய வலயங்களில் இரவு 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை ஒன்றரை மணி நேரம் மின் தடை ஏற்படும்.
மின்சாரம் துண்டிக்கப்படும் நேரமும் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நேரமும் திட்டமிடப்பட்ட நேரத்திலிருந்து 30 நிமிடங்களுக்குள் மாற வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan