நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
நாடு முழுவதும் நாளையும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரை மின்விநியோகம் தடைப்படாது என அறிவிக்கப்பட்ட போதும், இலங்கை மின்சார சபையினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்த்த மழை பெய்யாததால் நீர் மின் உற்பத்திக்காக நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை விடுவிப்பதை நீர் முகாமைத்துவ செயலகம் கட்டுப்படுத்தியுள்ளது.
இதனால் நீர் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியாமல் உள்ளமையினால் நாளையும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.