பரீட்சை காலத்தில் 24 மணிநேரமும் மின்சாரம்! வெளியான அறிவிப்பு
உயர்தர பரீட்சை முடிவடையும் வரை தடையின்றி மின்சாரத்தை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாமல் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை குறித்து விசாரிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று மின்சார அமைச்சு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபைக்கு அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், விசாரணையின் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 19 மணி நேரம் முன்
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam