முக்கிய அமைச்சரை வெளியேற்றி விட்டு மந்திராலோசனை நடத்திய ரணில்
அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுன சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் நேற்று பிற்பகல் மிக முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
விசேட உரையாற்றுவதற்காக ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பெரமுன கட்சி உறுப்பினர்கள்

இக்கலந்துரையாடலுக்கு பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குழு இந்தக் கலந்துரையாடலுக்காக நாடாளுமன்றத்தின் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வந்தபோது, அமைச்சர் பந்துல குணவர்தன ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.
வெளியேற்றப்பட்ட பந்துல

அமைச்சர் பந்துல குணவர்தன இல்லாமல் ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கமைய, ஜனாதிபதியின் அறையிலிருந்து பந்துல குணவர்தனவை வெளியேற்றி விட்டு கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri