ராஜபக்சவினர் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுத்துள்ள மக்கள்! 9 இலட்சம் கூட இல்லை என்று அறிவிப்பு
ராஜபக்சவினர் குறித்து மக்கள் இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளனர் என புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ராஜபக்ச ஆட்சிக்கு தேவையான ஆதரவு 69 இலட்சம் அல்ல 09 இலட்சம் கூட இருக்காது என்றும் அவர் கூறினார்.
மக்கள் இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளனர்
நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், பிரிந்து செயற்படுவதில் அர்த்தமில்லை. எதிர்காலத்தில் இடதுசாரி சக்தியின் தலைமை ஒன்று உருவாகும், அதன் தலைவராக தமக்கு விருப்பமில்லை குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராஜபக்ச ஆட்சி குறித்து தாம் எதுவும் கூறமுடியாது எனவும், மக்கள் இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You My Like This Video





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
