ரணிலின் வெற்றியால் பெரும் குழப்பத்தில் இந்திய ரோ! சஜித்தின் பிழையான முடிவு - புலனாய்வுச் செய்தியாளர் (VIDEO)
ரணில் உயிரோடு இருக்கும் வரை பிரதமர் பதவியை சஜித் எட்டிப்பிடிப்பது என்பது அடியோடு அழிந்து இனி நிறைவேறாத கனவாக மாறிவிடும் என இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
மேலும்,ரணில் ஜனாதிபதியாக நாட்டிற்குள் இருக்கும் இந்த இரண்டு வருடங்களில் எந்தவொரு உளவு படைகளும், உளவு அமைப்புக்களும் மோதிக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,