பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில்! கவலையளிப்பதாக சஜித் அறிவிப்பு
தனிநபர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு, பின்னர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை கவலை அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
A MP with one seat is appointed as PM. Now the same person is appointed as acting President. This is the Rajapaksa style of democracy. What a farce. What a tragedy.
— Sajith Premadasa (@sajithpremadasa) July 13, 2022
ராஜபக்ச ஜனநாயகம்
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை கேலிக்கூத்தான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ராஜபக்ச வடிவிலான ஜனநாயகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.