நாடு சீரழிவதற்கு காரணமாக இருந்தவர்களுக்கே மீண்டும் அமைச்சுப் பதவி! ரிஷாட்டின் குற்றச்சாட்டு

Vavuniya Risad Badhiutheen Sri Lanka Economic Crisis
By Thileepan Sep 19, 2022 06:17 AM GMT
Report

நாடு சீரழிவதற்கு காரணமாக இருந்த முன்னாள் அமைச்சர்களை மீண்டும் அமைச்சர்களாக நியமிக்க முன்னுரிமை வழங்கப்படுகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்பதியூதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, பட்டாணிச்சூரில் நேற்று (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மூன்று வருட ஆட்சியிலே மிக மோசமாக பொருளாதாரம் நாசப்படுத்தப்பட்டது. குறிப்பாக எனது வன்னி விஜயத்தின் போது மக்கள் கஸ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இக்கிறது.

பாதிக்கப்படும் கடற்றொழிலாளர்கள் 

நாடு சீரழிவதற்கு காரணமாக இருந்தவர்களுக்கே மீண்டும் அமைச்சுப் பதவி! ரிஷாட்டின் குற்றச்சாட்டு | Sri Lanka Political Crisis Rishad Badiutheen

மேலும், கடற்றொழிலாளர்கள்  மற்றும் விவசாயிகளிற்கு எண்ணெய் வழங்கப்படாமல் தொழில் பாதிக்கப்பட்டு மிகுந்த கஸ்டத்தின் உச்சத்தில் இருக்கின்றனர்.

திட்டமிட்ட அடிப்படையில் அவர்களின் செயல்பாடுகள் அமையாததால் சாதாரண குடிமக்களும் வாழ முடியாத நிலைமையை காண கூடியதாக இருக்கின்றது.

இதேவேளை, இலங்கை நாட்டை சீரழித்தவர்களிற்கு எதிராகவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணையை ஐ.நாவில் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிடின், சர்வதேசம் அவ்வாறானவர்களை தண்டிக்கும் என்ற செய்தியையும் சொல்லியிருக்கின்றது.

எனவே இவ்வாறான மோசமான நிலையில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்காக எதிர்காலத்திலே மக்கள் ஒன்றுபடவேண்டிய தேவை இருக்கின்றது.

அரசியலமைப்பு  மாற்றம் தொடர்பில் நடவடிக்கை இல்லை

நாடு சீரழிவதற்கு காரணமாக இருந்தவர்களுக்கே மீண்டும் அமைச்சுப் பதவி! ரிஷாட்டின் குற்றச்சாட்டு | Sri Lanka Political Crisis Rishad Badiutheen

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக பேச்சளவிலேயே ஆட்சியாளர்கள் இருக்கின்றார்களே தவிர, நாட்டை பற்றியோ, அரசியலமைப்பை பற்றியோ அல்லது நாட்டினுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவது சம்பந்தமான செயற்பாடுகளை காணவில்லை. 

மேலும் அமைச்சர் பதவிகளை அதிகளவில் வழங்குவதன் ஊடாக அவர்களிற்கு பக்கபலமாக இருக்கின்றவர்களான, இந்த நாடு சீரழிவுக்கு உள்ளானதற்கு காரணகத்தாவாக இருந்த முன்னாள் அமைச்சர்களை மீண்டும் அமைச்சர்களாக நியமிப்பதற்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றதே தவிர, அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.

ஏற்கனேவே 13வது திருத்தச்சட்டத்திலே மாகாண சபை ஆட்சி காலம் முடிவடைந்து பல வருடங்களாகியும் மாகாணசபை தேர்தல் நடைபெறாமல் உள்ளமையால் இத்தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியிருக்கிறது.

மேலும், இலங்கையிலே வடகிழக்கு மாகாணங்களில் இருந்து வலுவான வேண்டுகோள் இதற்காக எழுப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. எனவே, அதனை அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US