ரணிலுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு! நேசக்கரம் நீட்டும் நாமல்
பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலி - ரத்கம பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மாற்றத்தை நோக்கி பயணிக்கும் ஜனாதிபதி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பதவி விலகியவுடன் அரசியலமைப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். ராஜபக்சர்கள் மீது திட்டமிட்ட வகையில் போலி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
பொருளாதார முன்னேற்றம், அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்பாடு ஆகியவற்றுக்காகவே ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கினோம். ஒரு மாற்றத்தை நோக்கி ஜனாதிபதி பயணிக்கிறார்.
அவரின் கொள்ளை திட்டங்களை நிறைவேற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல் என்பதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை தனியார் மயப்படுத்துவது பிரச்சினைக்குரியது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு ஏதாவதொரு வழிமுறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என பல தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம்.அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவாக ஆராய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
