சமூக கட்டமைப்பு சிதைந்துபோனமைக்கு சமூகமட்ட சீரழிவே காரணம்! இ.இளங்கோவன்
இன்று இருக்கின்ற பல்வேறு சமூகமட்ட சீரழிவிற்கு அடிப்படை காரணம் சமூக கட்டமைப்பு சிதைந்துபோனமையே என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்தார்.
யாழ்.கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று இடம்பெற்ற நூற்றாண்டு விழாவின் கல்லூரிதின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தீர்க்கமான நல்ல முடிவு
அவர் மேலும் தெரிவிக்கையில்,''சமூக பாதுகாப்பென்பது இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதொன்றாகும், அன்றைய காலங்களில் கிராமங்களில் ஒரு அதிபர் அல்லது ஆசிரியர் வீடுகளில் மக்கள் காலையில் கூடுவார்கள் மக்களை வழிப்படுத்துபவராக அவர்கள் காணப்பட்டார்கள்.
அது தீர்க்கமான நல்ல முடிவுகளை தருகின்ற சமூகங்களை கொண்டிருந்தது.
இன்று இது மாறியுள்ளது மீண்டும் இவ்வாறு வரவேண்டும் என்றால் முன்பு போல இறுக்கமான கட்டமைப்புக்கள் சமூகங்களில் உருவாக்கப்படவேண்டும்.
பாரம்பரிய விழாக்கள்
அதுமட்டுமல்ல பாரம்பரிய விழாக்களை கொண்டாடுவதன் மூலம் அதனை அடுத்த சந்ததிகளுக்கு ஊட்டவேண்டிய தேவை உள்ளது.
கல்வியில் எவ்வாறான சீரமைப்புக்களை ஏற்படுத்தினாலும் சிறந்த ஆசிரியரால் தான் முழுமையான மாணவனை உருவாக்க முடியும்.
சமூகத்தில் சவால்களை சந்திக்ககூடிய மாணவனை உருவாக்குவது சிறந்த ஆசிரியரால் தான் முடியும்.இதில் கலாசாலையின் பணி மகத்தானது.''என கூறியுள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 1 மணி நேரம் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
