நாட்டின் வங்குரோத்து நிலைக்கு என்ன காரணம்! முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
மறைந்த பிரதமர் சிறிமாவே பண்டாரநாயக்கவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றிருக்காது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 107ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்கவின் உருவச் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சிறிமாவே பண்டாரநாயக்கவின் கொள்கை
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,“நாடு தற்போது திவாலாகிவிட்டது.மறைந்த பிரதமர் சிறிமாவே பண்டாரநாயக்கவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றிருக்காது.
அவரது கொள்கைகளின்படி அரசாங்கத்தால் திருட முடியாது. அதனால் நாடு வளர்ச்சி பாதையை அடைந்து முன்னேறி செல்லும். இப்போது அது பின்னோக்கி செல்கின்றது.”என தெரிவித்துள்ளார்.

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
