கோட்டாபய தப்பியோடவும் இல்லை! விரட்டியடிக்கப்படவும் இல்லை: பசில் வெளியிட்டுள்ள தகவல்
கோட்டாபய ராஜபக்ச, நாட்டைவிட்டு தப்பியோடவும் இல்லை. அவர் விரட்டியடிக்கப்படவும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற போராட்டங்களையடுத்து இலங்கையை விட்டுத் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
நாடு திரும்பிய கோட்டாபய
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவருடைய சகோதரர் பசில் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,“நாட்டில் சில தரப்புக்களின் சதி முயற்சியால் திடீரென எழுந்த கொந்தளிப்பு நிலைக்குத் தீர்வு காணவே கோட்டாபய ராஜபக்ச சுயமாக நாட்டைவிட்டு வெளியேறி ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியிருந்தார்.
நாட்டில் தற்போது அமைதி நிலவுவதால், அவர் மீண்டும் இங்கு வந்துள்ளார். அவர் இலங்கைப் பிரஜை. ஒரு முன்னாள் ஜனாதிபதி.
கோட்டாபயவின் அரசியல் பிரவேசம்

இந்நிலையில், அவர் வெளிநாடுகளில்
தங்க வேண்டிய அவசியம் இல்லை.
நாடு திரும்பியுள்ள அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளை அரசு
வழங்குகின்றது.
அவர் விரும்பினால் மீண்டும் 'மொட்டு'க் கட்சி ஊடாக அரசியலுக்குள் நுழையலாம்.
இது தொடர்பில் அவரே முடிவு எடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri