இலங்கை பொலிஸாரின் புதிய தொழில்நுட்பம்! சாரதிகளுக்கு எச்சரிக்கை
அதிவேகமாக செல்லும் வாகன சாரதிகளை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் புதிய தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
புதிய தொழில்நுட்பம் கொண்ட வேகத்தை கணிக்கும் கெமராக்களை பொலிஸார் பயன்படுத்துகின்றனர்.
குறித்த கெமராவில் சாரதியின் புகைப்படம், வாகன எண் மற்றும் வேகத்தை நிகழ்நேரத்தில் படம்பிடிக்கும் இரட்டை கெமராக்கள் மற்றும் இரவு பார்வை தொழில்நுட்பம் ஆகிய அம்சங்கள் உள்ளன.
விதிமீறலுக்கான தெளிவான ஆதாரம்
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த கெமராவை கொண்டு இரவில் கூட 1.2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வாகனங்களை கண்டறிய முடியும்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட காணொளிகள் நீதிமன்றத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான தெளிவான ஆதாரமாக செயற்படும்.

இவ்வாறு நாடு முழுவதும் 30 கெமராக்கள் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam