பொலிஸ் நிலையத்தில் கலகம் விளைவித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது
அஹங்கம பொலிஸ் நிலையத்தில் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப பிணக்கு தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், அவரது கணவர் மற்றும் அவரது கணவரின் சகோதரி ஆகியோர் அஹங்கம பொலிஸ் நிலையத்தில் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் காரணமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அஹங்கம கஹடகஹவத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ள நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸ் பிரிவில் கடமையாற்றியுள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு

குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் குடும்ப தகராறு தொடர்பாக தனது கணவர் மற்றும் கணவரின் சகோதரிக்கு எதிராக கடந்த 10 ஆம் திகதி அஹங்கம பொலிஸில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
இருதரப்பினரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து, விசாரணை மேற்கொண்டபோது இரு பிரிவினரும் பொதுமக்கள் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அசௌகரியத்தை ஏற்படுத்தியதால் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள், அவரது கணவர், கணவரின் சகோதரி ஆகியோர் பொதுமக்களுக்கு மற்றும் பொது ஒழுங்கை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்திருந்த பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் முன்னிலையில் அநாகரிகமாக நடந்துகொண்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தரிடம் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 18 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri