அரசியல் அழுத்தங்களில் இருந்து பொலிஸ் திணைக்களத்திற்கு விடுதலை
பொலிஸ் திணைக்களத்தை அரசியல் அழுத்தங்களில் இருந்து முழுமையாக விடுவிக்க முடிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொலிசார் மீது அரசியல் அழுத்தங்கள் இல்லை
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
முன்னைய காலங்கள் போன்று தற்போது பொலிசார் மீது எதுவித அரசியல் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுவதில்லை. அதன் காரணமாக அவர்களால் சுதந்திரமாக செயற்பட முடிகின்றது.

கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் திணைக்களத்தை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் குழு இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri