அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் தலையை வெட்டி எடுத்து சென்ற மர்ம நபர்கள்
மத்திய மாகாணத்திற்குட்பட்ட தலகிரியாகம தென்னகோன்புர பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்த சிலர், தலையை வெட்டி எடுத்துச் சென்றதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பொது மயானத்திற்கு அருகில் நடந்து சென்ற ஒருவர் இதனை பார்த்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைக் கண்ட நபர் உயிரிழந்தவரின் மகளுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
இது தொடர்பில் உயிரிழந்தவரின் மகள் கலேவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இறந்தவரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. தலையை சூனியம் செய்வதற்காக எடுத்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தென்னகோன்புர பிரதேசத்தில் வசித்து வந்த 80 வயதான பெண், கடந்த ஒகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகவும், அன்றைய தினமே சடலம் புதைக்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
