மொட்டு அணிக்குள் குழப்பம்: வெளியேற்றப்படும் மகிந்த
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இளைஞர் தலைமைத்துவத்தை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.
அத்தோடு, கட்சிக்கு சிரேஷ்ட தலைமைத்துவம் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிறந்த தலைமைத்துவம்
எவ்வாறாயினும், கட்சிக்கு சிறந்த தலைமைத்துவம் இருப்பதாகவும், மகிந்த ராஜபக்ச அந்த பதவிகளை வகிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

கட்சியில் தலைமைத்துவத்திற்கு பொருத்தமானவர்கள் பலர் இருப்பதாகவும், அதனால் யாருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் மகிந்த இங்கு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri