ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மீண்டும் கட்டியெழுப்பும் ராஜபக்சர்கள்!
இலங்கையில் ராஜபக்சர்களுக்கான எதிர்ப்புக்கள் குறைந்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நகர்வுகள் இடம்பெறுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கான முதல் கட்டம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய இரவு விருந்தின்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விருந்துபசாரம், கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்சவின் குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகத்தில் நடைபெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
குறித்த சந்திப்பு மற்றும் விருந்துபசாரத்தில் மொத்தம் 62 அரசாங்கக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
மூன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது, பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலை குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஒரு பெரிய பேரணியை
நடாத்துவதுடன், பெருந்திரளான மக்கள் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்
என்று இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam