இலங்கையின் அணுசக்தி உற்பத்தி திட்டம் குறித்து வழங்கப்பட்டுள்ள அறிவுரை
அணுசக்தி உற்பத்தி திட்டத்தை இலங்கை ஏற்க வேண்டுமானால், முதலில் அந்த நாடு உறுதியான சட்டக் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆலோசகர் மற்றும் அணுசக்தி நிபுணர் ஹலீல் அவ்சி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் அணுசக்தி அதிகாரிகளின் சிறப்பு நிகழ்வில் உரையாற்றும் போது இதனை கூறியுள்ளார்.
அணுசக்தி உற்பத்தி திட்டங்களை ஏற்கும் முன் சுற்றுச்சூழல் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளும்போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
பல காரணிகள்
இதன்போது ஒரு நாட்டில் அணுசக்தி திட்டத்தை மேற்கொள்ளும் போது கருத்தில் கொள்ள வேண்டிய பல காரணிகள் உள்ளன என்றும், அதில் முதலாவது உறுதியான சட்டப் பின்னணியை ஏற்படுத்துவது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஒரு நாடு அணுசக்தி உற்பத்தி திட்டங்களை ஏற்க வேண்டுமா? அல்லது பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் பிற காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டுமா என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக அணுசக்தி உற்பத்தி தொடர்பில் இலங்கை,ரஷ்யாவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தமையின் மத்தியிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
