உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் ஹரிணி
இலங்கையின் 17ஆவது பிரதமராக ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) இன்றையதினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
பிரதமராக, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமைச்சுப் பொறுப்புக்கள்
புதிய அரசாங்கத்தின் 21 பேர் கொண்ட அமைச்சரவை இன்று முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.
புதிய அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் இருந்து அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானவராவார்.
655,289 விருப்பு வாக்குகளை அவர் பெற்றுக் கொண்டிருந்தார்.
மேலும், பிரதமர் ஹரிணி அமரசூரியகல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.




SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
