சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட வேண்டிய ராஜபக்சர்களின் குற்றங்கள்! அநுரவுக்கு சவால்
ராஜபக்சர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சவால் விடுத்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாங்கள் தற்போது பொதுஜன பெரமுன கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். கட்சியின் முக்கிய பதவிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
2029ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் பிரதான அரசியல் கட்சியாக எழுச்சிப் பெறும்.
நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்ட பொய் இன்று அரசாங்கத்துக்கே வினையாக மாறியுள்ளது. வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அத்துடன் ராஜபக்சர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்.
ஜனாதிபதி அநுர குமார இந்தியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை. குறிப்பாக எட்கா ஒப்பந்தத்தை குறிப்பிட வேண்டும். குறுகிய அரசியல் மாற்றத்துக்காக அடிக்கடி கொள்கைகளை மாற்றிக் கொள்வது முறையற்றதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
