இலங்கை கடற்படையினரால் ஏழு பேர் கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முறய்சித்த ஏழு பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடல் வழியாக வெளிநாடு ஒன்றுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்ல முயற்சித்தவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தலைமன்னார் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
படகு மூலம் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற காத்திருந்த போது இந்த நபர்களை கைது செய்ததாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் 18 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் எனவும், ஏனையவர்கள் 18 வயதுக்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.