முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு சஜித்துக்கே: தௌபிக் எம்.பி ஆரூடம்
இந்த ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இருக்கும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபிக் தெரிவித்துள்ளார்.
தற்போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒற்றுமையின் வேகத்துடன் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
இந்நிலையில், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தமது கட்சியின் அதியுயர் சபை இறுதித் தீர்மானத்தை எட்டவில்லை என்றாலும், எதிர்க்கட்சித் தலைவருக்கு அதியுயர் சபை ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் இணைந்து செயற்படுவதால், எதிர்க்கட்சித் தலைவருக்கு உச்ச சபையின் ஆதரவும் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan