லண்டன் சென்ற இலங்கை கராத்தே அணி நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்
பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப் 2022 இல் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தவுடன் இலங்கை தேசிய கராத்தே அணி நாடு கடத்தப்பட்டமை குறித்து விசாரணை நடத்த இலங்கையின் விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றிருந்த இலங்கை கராத்தே அணியினரிடம் ஹீத்ரோ விமான நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து அவர்களது விசாக்கள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
நாடு கடத்தப்பட்டமைக்கான காரணம்
பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப் 2022 இல் பங்கேற்பதற்காக சென்றபோது, மூன்றாம் தரப்பினருக்கும் தற்போதைய கராத்தே தோ சம்மேளனத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலால் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
