கடனை செலுத்த இன்னும் இலங்கை தயாராகவில்லை! சஜித் சுமத்தும் குற்றச்சாட்டு
இலங்கையின் ஏற்றுமதியில் கணிசமான பகுதி அமெரிக்க சந்தைக்கு அனுப்பப்படுகின்றன. எனினும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் விதிக்கப்பட்ட பழிவாங்கும் வரிகள் காரணமாக இந்த ஏற்றுமதிகள் தற்போது கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
மற்ற நாடுகள் அமெரிக்க பொருளாதார கொள்கை வகுப்பாளர்களுடன் பேச்சு நடத்தி இந்த வரிகளின் தாக்கத்தைக் குறைக்க பரஸ்பர புரிதல் ஒப்பந்தங்களை எட்டியுள்ளன எனினும் இலங்கையின் பொருளாதாரத் தலைவர்களும் தொழில்துறை பிரதிநிதிகளும் அதைச் செய்யத் தவறிவிட்டனர் என்றும் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
வெளிநாட்டு கடன்
இலங்கை தனது வெளிநாட்டு கடனை 2028 ஆம் ஆண்டுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
இந்தநிலையில், தற்போதைய நிர்வாகம் முன்னைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செயற்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை தமது கடனை திருப்பிச் செலுத்தவேண்டுமானால், 5 வீத பொருளாதார வளர்ச்சி விகிதம் அவசியமாகும். எனினும் இந்த ஆண்டுக்கான திட்டமிடப்பட்ட வளர்ச்சி 3.5வீதம் மட்டுமே என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 4 மணி நேரம் முன்

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
