இலங்கை மிகவும் ஆபத்தான நிலையிலேயே உள்ளது - விசேட வைத்தியர் எச்சரிக்கை
நாட்டில் பயண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதிலும் இன்னமும் சுதந்திரமாக செயற்பட முடியாத ஆபத்தான நிலை உள்ளதாக விசேட வைத்தியர் சுஸி பெரேரா தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சையும் மீறி பயணத்தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காகவே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுக்கும் நிலைமைக்கு வந்தது.
இவ்வாறு பயணத்தடையை நீக்கியமையின் ஊடாக மிகவும் ஆபத்தான முறையில் கொவிட் பரவ கூடும். இதனால் கிடைத்த சுகந்திரத்தை அனுபவிக்க சென்று வாழ்க்கையை இழந்து விட வேண்டும் என நான் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
ஆபத்தான இந்திய மாறுபாடான டெல்டா பரவல் இதுவரையில் வேகமாக ஆரம்பித்துள்ளதனை தெளிவுப்படுத்துவதற்காக நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட வைத்தியர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.