இலங்கை ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நாடு: சஜித்திடம் கூறிய இந்திய நிதி அமைச்சர்
இலங்கை ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நாடு என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புதுடில்லியில் அமைந்துள்ள நிதி அமைச்சில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று (04.11.2025) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தியா போன்ற பெரிய சந்தை வாய்ப்புகளை அணுகுவதன் மூலம் இலங்கையின் தொழில் துறையை வேகமாக முன்னேற்றம் காணச் செய்ய முடியும் என்று இந்திய நிதி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய நிதி மானியம்
வலுவான உள்நாட்டு தொழில் துறைகள் மூலம் இலங்கையின் பொருளாதார இறையாண்மையை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் 2022இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய 4 பில்லியன் அமெரிக்க டொலர் ஒத்துழைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றியை இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரு தனி நாடாக இலங்கைக்கு வழங்கிய மிகப் பெரிய நிதி மானியம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
தொழில் துறை கொள்கை மற்றும் டிஜிட்டல் ஆளுகை தொடர்பில் இந்தியாவின் சாதனைகளைப் பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர், ஒப்பீட்டு ரீதியாக நிலைத்தன்மை காணப்பட்ட போதிலும், இலங்கை இன்னும் வெளிநாட்டு கையிருப்புக்களை மீண்டும் கட்டியெழுப்புதல், ஏற்றுமதிகளை பன்முகப்படுத்தல் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
[UKB2H ]
வெளிப்படையான மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான ஒத்துழைப்பின் அவசியப்பாடு தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு இணங்கிக் கொண்டனர். கூட்டு முயற்சியாண்மைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கு இந்தியா - இலங்கை தொழில் நுட்பம் சார் கைத்தொழில் வலயத்தை உருவாக்கும் யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது முன்வைத்துள்ளார்.
நவீன வர்த்தக யதார்த்தங்களுக்கு ஏற்றவாறு இந்திய - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்வதற்கும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam