அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் கட்டண திருத்தம்:வெளியான அறிவிப்பு
கொழும்பு விமானத் தகவல் வலயத்தின் ஊடாகப் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.
கட்டணங்கள் திருத்தப்படவில்லை
கொழும்பு விமான தகவல் வலயத்தின் ஊடாகப் பறக்கும் சர்வதேச விமானங்கள் தொடர்பான விமானப் போக்குவரத்துக் கட்டணம், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தினால் அறவிடப்படும்.

குறித்த கட்டணங்கள் 1985 ஆம் ஆண்டு முதல் திருத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது அறவிடப்படும் கட்டணத்தை பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தியமைக்க துறைமுகங்கள்,கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri