நிதி உதவிகள் எதனையும் இலங்கை இதுவரையில் கோரவில்லை - சர்வதேச நாணய நிதியம்
நிதி உதவிகள் எதனையும் இலங்கை இதுவரையில் கோரவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதிநிதி மஸாஹிரோ நொசாகீ இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட கால பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அண்மைய நாட்களில் இலங்கை நிதி உதவி எதனையும் கோரவில்லை எனவும், அவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அது குறித்து கவனம் செலுத்தத் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.