பொது நலவாய அமைப்புடனான நிலைப்பாட்டை உறுதி செய்துள்ள இலங்கை
பொதுநலவாய அமைப்புடனான நிலைப்பாட்டை இலங்கை உறுதி செய்துள்ளது.
பொதுநலவாய பொதுச்செயலாளர் பெற்ட்ரிசியா ஸ்காட்லாந்துடன் நியூயார்க்கில் நடந்த மெய்நிகர் சந்திப்பில், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ், இந்த உறுதிப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
பொது நலவாய அமைப்பின் ஸ்தாபக உறுப்பினராக இலங்கை, அமைப்பின் மதிப்புகள், கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களுடன் அர்ப்பணிப்புடன் இருப்பதை இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நினைவு கூர்ந்துள்ளார்.
பொதுநலவாய அமைப்புடன் வணிகம், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளில் மேலும் ஒத்துழைப்பை இலங்கை எதிர்பார்க்கிறது.
உணவு பாதுகாப்பு மையப்படுத்தப்பட்ட விவசாய உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தி இலங்கையில், "காலநிலை மற்றும் பசுமை பொருளாதாரம்" தொடங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம் தொடர்பாக நாட்டில் உள்ள உள்ளூர் அமைப்புக்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வெளியுறவு அமைச்சர் பொதுச்செயலாளர் ஸ்காட்லாந்துக்கு விளக்கினார்.
இது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், மேலும் உள்ளூர் அமைப்புகள், தங்கள் ஆணைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான காலம் தேவைப்படுகிறது.
இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு வெளிப்புற அமைப்புகளின் தலையீட்டை ஏற்க முடியாது என்றும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிறுவ முயற்சிக்கும் தற்காலிக பொறிமுறையை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.