அரச ஊழியர்களுக்கு அனுமதி வழங்கும் சுற்றறிக்கை! நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு
அரச ஊழியர்கள் தொடர்பிலான சுற்றறிக்கையொன்று அடுத்த வாரம் வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (28.04.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அரச ஊழியர்களுக்கு தேர்தல் தொகுதிகளுக்கு அண்மித்த பிரதேசங்களிலுள்ள அரச நிறுவனங்களில் பணிபுரிய அனுமதி வழங்கும் சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்.
வழங்கப்படும் சந்தர்ப்பம்

அத்துடன் தொலைதூர பிரதேசங்களில் இருந்து அரச நிறுவனங்களுக்கு வருபவர்களுக்கு மீண்டும் அந்த இடங்களிலேயே கடமைகளை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
இதேவேளை தேர்தல் பிற்போடப்பட்டாலும் இரத்து செய்யப்படவில்லை என்ற நிபந்தனையின் கீழ் தேர்தல் சட்டத்தை மீறாத வகையில் செயற்படுவது முக்கியம். அந்த உண்மையை தேர்தல்கள் ஆணைக்குழுவும் சுட்டிக்காட்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri