அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு: அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்க வேண்டும் என அரசாங்க நிர்வாக அதிகாரிகளின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறான தீர்வை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஏப்ரல் முதல் வாரத்தில் இரண்டு நாட்களுக்குள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
18 பிரதான தொழிற்சங்கங்கள்
பொதுச் சேவையின் 18 பிரதான தொழிற்சங்கங்கள் நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழுவில் உள்ளதாக குழுவின் தலைவர் எச்.ஏ.எல்.உதயசிறி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |