அரச ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் வங்கி வைப்புக்கள்! பாதிப்பு ஏற்படுமா..
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியம்(ஈ. பி. எப்), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ஈ.ரி.எப்) மற்றும் வங்கி வைப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்கம் வழங்கியுள்ள உத்தரவாதம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடன் மறுசீரமைப்பு செயல்முறை வங்கி வைப்புகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற தெளிவான உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது.

இந்த வைப்புத்தொகைகளின் நிலைப்புத் தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வட்டி வீதங்களில் எந்தக் குறைவும் ஏற்படாது.
இதேபோல், தனிநபர்களின் ஓய்வூதியம் மற்றும் ஊழியர்களின் நிதிகள் தொடர்பான நலன்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.
இந்த நிதியின் உறுப்பினர்கள் பெற வேண்டிய இருப்பு மற்றும் வட்டியில் பாதகமான பாதிப்புகள் இருக்காது.
இந்த விடயங்கள் மிகுந்த உணர்திறனுடன் கையாளப்படுகின்றன, மேலும் அவற்றின் நேர்மையைப் பேணுவதற்கும் மக்களின் நிதி நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 14 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam