அரச ஊழியர்களுக்கு அரை மாத சம்பளம்! அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு
அரசாங்க ஊழியர்களுக்கு அரை மாத சம்பளம் மாத்திரம் வழங்கப்படும் என வெளியாகும் செய்திகள் குறித்து அரசாங்கத் தரப்பினரால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அரை மாத சம்பளம்
இதன்படி, அரசாங்க ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் அரைவாசி சம்பளம் மாத்திரம் வழங்கப்படும் என்று வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் அரை மாத சம்பளம் மாத்திரமே வழங்கப்படும் என கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் பகிரப்படுகின்றன.