அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று(15.10.2024) கருத்து தெரிவிக்கும் போதே இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நிதி நிலை
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் மேலும் ஆராயப்பட வேண்டுமென கூறியுள்ளார்.
முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியுமா? எப்படி? என யோசித்து, நிதி நிலைமையை வைத்து புதிய முடிவை எடுப்போம். இல்லை என்று சொல்ல மாட்டோம். நிதி நிலையைப் பொறுத்துதான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு முடிந்ததும், அரசு ஊழியர்களின் சம்பளம் ஜனவரி முதல் உயர்த்தப்படும் என்று கடந்த அமைச்சரவை திடீர் முடிவு எடுத்தது.
ஆனால் நாங்கள் விசாரித்தபோது நிதி அமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது தான் உண்மையில் நடந்தது என கூறியுள்ளார்.

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
