அனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
அனைத்து அரச நிறுவனங்களையும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
கணக்காய்வாளர் அறிக்கை
அதன்படி 420 அரச நிறுவனங்களை கோப் குழு முன் அழைக்க தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம், வருடாந்தம் அரச நிறுவனங்களை கோப் குழுவின் முன் அழைக்க வேண்டும் என்ற போதிலும், அது சரியான முறையில் செய்யப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் 04 அரச நிறுவனங்கள் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ளன.
மீண்டும் அழைக்கப்படவுள்ள நிறுவனங்கள்
இதற்கமைய இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், காணி சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை விமான சேவை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பன கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு ஆகியவை இவ்வருடம் கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக மீண்டும் அழைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

Ethirneechal: சூழ்ச்சியில் குணசேகரனையே தோற்கடித்த வீட்டு பெண்கள்... கதையில் எதிர்பாராத திருப்பம் Manithan

உலகின் வேகமாக வளர்ந்து வரும் மதம் எது தெரியுமா? 10 ஆண்டுகளில் 34 கோடிக்கும் அதிகமான மக்கள் News Lankasri
