பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய போராட்டம் (Video)
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு உடனடி தீர்வு கோரியும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் உடடினயாக பதவி விலகவேண்டும் என வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
“கோட்டா - ரணில் சாபத்திற்கு முடிவு கட்டுவோம்” என்ற தொனிப்பொருளிலே இப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ் ஆர்ப்பாட்டமானது கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தொடரும் போராட்டம்
இப் போராட்டத்தில் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரமதாச பங்கேற்றுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்குப்பற்றியுள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தை ஜனாதிபதி செயலகத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்வதற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக நேற்று (29) கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாண மக்களை ஒன்றிணைந்து கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணையுமாறு சமகி ஜன பலவேகய அமைப்பு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.
இதன் காரணமாக கோட்டையில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரை பல இடங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பும் பலபடுத்தப்பட்டுள்து.
கொழும்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்:ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள கடிதம் (Video) |