அநுர அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு கெடுபிடி அதிகம்
இந்த நாட்டில் ஜனாதிபதியோ அல்லது எந்தவொரு அமைச்சரோ பொதுச் சொத்தை தத்தமது விருப்பத்தின் படி பயன்படுத்த முடியாது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கலாசாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நம் நாட்டுக்கு அரசியலில் ஒரு தரம் வேண்டும். அரசியல்வாதி நினைத்ததைச் செய்யலாமா? இல்லை. அதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது. அரசியல்வாதி ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் செயற்படவேண்டும். அரசியல்வாதி சட்டத்துக்குக் கீழ்படிய வேண்டும். அரசியல்வாதி நாகரிகமான சட்டத்தில் இருக்கவேண்டும்.
பதிவு செய்யப்படாத வாகனங்கள், சுங்க வரியை முறையாக செலுத்தாமல் சுங்கச்சாவடியிலிருந்து ஓட்டிச் செல்லும் வாகனங்கள், சில வாகனங்களைப் பார்த்தால் அவை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாக இருக்கும். அதுதான் நம் நாட்டின் அரசியல் கலாசாரம்.
எனவே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்துக்கு உயிர் கொடுக்கின்றோம். நாம் அதை செய்கின்றோம்.
இந் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் பொதுச் சொத்தை தத்தமது விருப்பத்தின்படி பயன்படுத்த முடியாது. அப்படிப்பட்ட அரசியல் எமக்கு தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
