இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்!
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இயற்கை வளங்கள் துறையின் பேராசிரியர் மெத்திகா விதானகே தற்போது தனது பணியிடத்திற்கு துவிச்சக்கர வண்டியில் செல்வதனை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்.
தனது உடல்நிலையை மேம்படுத்துவதற்கும், நாடு எதிர்நோக்கும் தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கும் மாற்றாகவும் தான் சைக்கிளை தெரிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
துவிச்சக்கர வண்டி பயன்பாடு

கடும் எரிபொருள் தட்டுப்பாடு, நீண்ட வரிசை, கட்டுப்பாடற்ற எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால் சோர்வடைந்த பலர் தற்போது துவிச்சக்கர வண்டியின் பக்கம் திரும்பியுள்ளனர். அவர்களில் வல்லுநர்கள், பேராசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.
எனினும் துரதிர்ஷ்டவசமான நிலையாக தற்போது சைக்கிள்களின் விலை இரண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
சடுதியாக அதிகரித்துள்ள விலையேற்றம்

சிலர் பழைய சைக்கிள்களை வீட்டிலேயே சரி செய்து மீண்டும் பயன்படுத்த திட்டமிட்டுள்ள போதிலும் சந்தையில் சைக்கிள் உதிரிபாகங்கள் தட்டுப்பாடு அதற்கும் தடையாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதுள்ள நடைமுறை சிக்கல்களைக் குறைத்து, துவிச்க்கர வண்டி ஓட்டுதலை மீண்டும் ஊக்குவிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டுமென துவிச்சக்கர வண்டி தொடர்பான சங்கங்கள் கேட்டுக்கொள்கின்றன.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 21 மணி நேரம் முன்
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri