ஈரான் - இஸ்ரேல் மோதல் நிலை! எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவியும் யாழ். மக்களுக்கு எச்சரிக்கை
செயற்கையான ஒரு எரிபொருள் தட்டுப்பாட்டு நிலவரத்தை தோற்றுவிக்க வேண்டாம் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் தற்போது தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலையில் கடுமையான அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.
இந்த நிலையில், எரிபொருளுக்கு பற்றாக்குறையும் ஏற்படும் என்று கருதி யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு படையெடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் இது ஒரு செயற்கையான எரிபொருள் பற்றாக்குறை என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
போதுமானளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது என்றும், போலியான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 15 மணி நேரம் முன்

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
