நான் தலைவராகி விடுவேன் என சிலருக்கு அச்சம்-தயாசிறி ஜயசேகர
தனிப்பட்ட ரீதியிலான பொறமையே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு காரணம் என அந்த கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நகத்தில் கிள்ள எறிய வேண்டியவை கோடாரியில் வெட்டும் நிலைமைக்கு சென்றன
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளை சங்க குழுக்களை வலுப்படுத்தி, கட்சியை மறுசீரமைக்கும் போது, கட்சியின் தலைவர் பதவிக்கு என்னை நியமிக்கும் முயற்சி நடப்பதாக சிலர் அஞ்சுகின்றனர்.
நான் ஒரு போதும் தலைவரை காலைப்பிடித்து இழுத்து, பதவியை பெறும் நபர் அல்ல. நான் கட்சியின் தலைவராக வந்து விடுவேன் என சிலர் பயப்படுகின்றனர். தனிப்பட்ட ரீதியிலான அரசியல் பொறமை மற்றும் ஆத்திரம் காரணமாகவே கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
நகத்தில் கிள்ளி எறிய வேண்டியவை இறுதியில் கோடாரியில் வெட்டும் நிலைமைக்கு சென்றன. அப்படியான நபர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சுமதிபாலவின் பெயர் மீண்டும் பரிந்துரைக்கப்படும்
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணி கட்சிகள் கூடும் முதல் சந்திப்பில், முன்னணியின் செயலாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் பெயர் மீண்டும் பரிந்துரைக்கப்படும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவிக்கு ஒருவரை பரிந்துரைக்கும் உரிமை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இருக்கின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு புத்துயிர் ஊட்டுவதை கண்டு அச்சும் அரசாங்கத்திற்கு பொதி சுமக்கும் நபர்களுக்கே திலங்க சுமதிபாலவின் பெயர் பரிந்துரைக்கப்படுவது பிரச்சினையாகி இருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

தித்திப்பான சர்க்கரைப் பொங்கல் ரெசிபி- சர்க்கரை நோயாளருக்கு பாதிப்பு இல்லாமல் செய்வது எப்படி? Manithan

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam
