மதிய உணவுப் பொதி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக சங்கத் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்(Harshana Rukshan) தெரிவித்துள்ளார்.
குறைக்கப்படும் விலை
நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் நன்மையை நுகர்வோருக்கு வழங்கும் பொருட்டு இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, மதிய உணவுப் பொதி மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய சிற்றுண்டிப் பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 1 நாள் முன்

பாதி உண்மை தெரிந்ததற்கே மயிலை வீட்டை விட்டு அனுப்பிய சரவணன் .. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam

தமிழ்நாட்டில் ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாவட்டத்தில் இருக்கிறது? News Lankasri
