மற்றுமொரு உணவுப்பொருளின் விலை அதிகரிப்பு
இலங்கையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 1.9 வீதத்தினால் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற தேங்காய் ஏல விற்பனையின் போது ஆயிரம் தேங்காய்களின் விலை 58,516.87ஆக நிலவியது.
இலங்கை தெங்கு அபிவிருத்தி சபையினால் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் கிடைத்த அதிக விலை 68,000 ரூபாவாகும்.
வருமானம் உயர்வு

ஏற்கனவே அதற்கு முந்திய வாரத்தில் 1,000 தேங்காய்களுக்கு ஏலத்தில் கிடைத்த விலை 63,700ஆக நிலவியது.
இந்நிலையில் இந்த ஏலத்தின் போது 10 இலட்சத்து 18 ஆயிரத்து 186 தேங்காய்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. அதில், 7 இலட்சத்து 6 ஆயிரத்து 9 தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டன.
இதேவேளை, கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் தேங்காய் அடிப்படையிலான பொருட்களின் ஏற்றுமதி 7 சதவீதத்தால் அதிகரித்து அதன் வருமானம் 573 மில்லியன்களாக உயர்ந்துள்ளது.
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri