பலாலி கடற்றொழிலாளரை கைது செய்த விவகாரத்தில் குழப்பநிலை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பலாலியை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக இந்திய கடற்றொழிலாளர்களால் கைது செய்யப்பட்டு தாக்க பட்ட விவகாரம் அண்மையில் பேசு பொருளாக இருந்தது.
அதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளரின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடற்றொழிலாளரின் குடும்பத்தினர்
தம்மை திட்டம் இட்டே கடல் கொள்ளையர் என கைது செய்ததாகவும் தாம் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது இல்லை எனவும் மற்றும் சில நாட்களுக்கு முன்னர் எம்மை பற்றி கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் என அடையாள படுத்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நபர்கள் தம்மில் உள்ள தனிப்பட்ட பகை நோக்கின் அடிப்படையிலே அவ்வாறு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பலாலி பொலிசார் தமது விருப்பம் இன்றி முறைப்பாடுகளை தள்ளுபடி செய்துள்ளனர் எனவும் கூறியுள்ளனர்.
மற்றும் இந்த அவமானம் காரணமாக தமது பிள்ளைகள் பாடசாலை மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக வெளி இடம் செல்ல மறுப்பு தெரிவிப்பதாகவும் இதனால் தாம் பல சமூக பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
விசேட கலந்துரையாடல்
கைது நடவடிக்கை தொடர்பாக பலாலி கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
அதன் தொடர்ச்சியாக சங்க உறுப்பினர்களிடம் இருந்து சிலர் கைது நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இந்திய கடற்றொழிலாளர்களால் கைது செய்யப்பட்டு தாக்கபட்ட நபர்கள் தமது மக்களுக்கு கடல் தொழிலுக்கு போன போது இந்திய கடற்றொழிலாளர்களை கண்டு சாப்பாடு கேட்க போனதாகவும் அப்போது அவர்கள் கைது செய்து தாக்கபட்டதாகவும் கூறும் தகவல் போலியானது மற்றும் 2016 ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் மீள குடி பெயந்த பின்னிருந்து சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
மற்றும் இவை சம்பந்தமாக பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்ட குழுவினர் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் செய்து வருவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட நபர்கள் குறித்த களவு செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த போது கடல் தொழிலாளர் சங்கத்தினர் இவர்களை கையுடன் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
குற்ற செயல்
சம்பவம் தொடர்பாக பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான் இவ்வாறான குற்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனவும் தற்போது அவர்கள் தூண்டில் எனும் கடல் தொழிலுக்கு சென்றதாக கூறுகின்றனர் ஆனால் அவர்கள் குறித்த தொழிலுக்கு சென்றததுக்கு எந்த ஆதாரமும் தப்பி வந்த கடற்றொழிலாளர்களின் படகில் இல்லை என்றும் எமது மக்களுக்கும் அவர்களுக்கும் எந்த தனிப்பட்ட பகையும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
மற்றும் அவர்கள் இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபடுவதால் தான் அவர்களை ஊர் மக்கள் ஒதுக்கி வைத்து உள்ளனர் அதற்காகத்தான் நாம் அனைவரும் ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri