எல்லா பிரச்சினைகளுக்கும் இதுவே முடிவு: மக்கள் வெளிப்படுத்திய தீர்வு (video)
நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்தடைந்துள்ள நிலையில் மக்கள் கையில் பணம் இல்லை. மக்களின் வாழ்வாதாரத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்தால் மக்களின் கையில் பணம் இருக்கும் என சகலரும் யோசித்துக்கொண்டிருக்கின்றோம்.
இதற்கமைய எமது லங்காஸ்ரீ ஊடகத்தில் மக்கள் குரல் நிகழ்ச்சியின் ஊடாக பொதுமக்களிடம் ஒரு சில கேள்விகளை வினவியுள்ளோம்.
இதற்கு அவர்கள் பதிலளிக்கையில், அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உதவிகளை வழங்குகின்றது என கூறும் போதிலும் அந்த உதவிகள் உண்மையிலே கஷ்டப்படும் மக்களுக்கு கிடைப்பதில்லை.
பொருளாதார நெருக்கடி
மக்களின் செலவீனங்கள் கூடியதே தவிர வருமானம் கூடவில்லை. தேர்தல் நடைபெற்றால் வாக்குரிமைகளை செல்லுப்படியாகாதவாறு தான் பதிவிட வேண்டும்.
குறிப்பாக இந்த அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருக்கும் பணத்தை அறவிட்டாலே எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்.
நாடு முன்னோக்கி நகர நல்ல தலைவர் தேவை என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,