ஏமாற்றப்படும் இலங்கை மக்கள்! நெருக்கடியில் இருந்து மீள வழியில்லை
பொருளாதார நெருக்கடியில் இலங்கை மீள்வதற்கு ஐஎம்எப் நிதி உதவி பெரிய வகிபாகம் வகிக்குமென்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் மக்களை முட்டாளாக்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர் என யாழ். பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறைத் தலைவர் பேராசிரியர் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஐஎம்எப் இன் கடன்கள் பாரியளவில் உதவி செய்யும் என்று ஒரு மாயை ஒன்றை ஆளும் ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.
மக்களை முட்டாளாக்கும் நடவடிக்கை
இலங்கைக்கு ஐஎம்எப் உதவி வழங்குவது இது முதல் முறை அல்ல, கடந்த முப்பத்தைந்து, நாற்பது வருடங்களுக்கு முன்னர் 1978ஆம் ஆண்டு இலங்கை திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு வந்ததன் பின்னர் ஐஎம்எப் உதவி வழங்கியது.
இது இப்போது, இந்த ஐஎம்எப்பை காட்டி நாங்கள் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டிடுவோம் என்று அடுத்த தேர்தலையும் வாக்கு வங்கியையும் மையமாக கொண்டு பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றதே ஒழிய மக்களை இன்னும் முட்டாளாக்கும் நடவடிக்கைகளையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
உண்மையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு, மக்களுக்கு சுபீட்சமளிக்கும் நடவடிக்கைகள் இங்கு முன்னெடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
