காட்டுக்குள் அமைக்கப்பட்ட பங்களாவில் பதுங்கியிருக்கும் ராஜபக்ஷ குடும்பம்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரது குடும்பத்தினர் தங்கியிருக்கும் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திருகோணமலை கடற்படைத் தளத்தின் ஏரியா கமாண்டர் பகுதியில் உள்ள கப்பல்துறை தளத்தில் உள்ள Pillow House எனப்படும் பங்களாவில் தங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென குறித்த ஊடகத்தின் உள்ளக பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலதிக பாதுகாப்பிற்காக முன்னாள் கடற்படை தள பணியாளர்கள் Pillow House மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நேவி ஹவுஸ் அமைந்துள்ள இடம் கடலுக்கும், கடற்படை தளத்தின் நுழைவாயிலுக்கும் அருகில் உள்ளது, அதே நேரத்தில் Pillow House மாளிகை காட்டில் அமைந்துள்ளது. அதைச் சுற்றி பல ரகசிய இடங்கள் உள்ளன.
Pillow House மாளிகை பாதுகாப்பான இடம் என்பதால், மஹிந்த உள்ளிட்ட குழுவினர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள ராஜபக்ச அணியினர் இரண்டு உலங்கு வானூர்திகளில் கட்டுநாயக்காவிற்கு வருவதாக கூறி மக்களை குழப்பியுள்ளனர். இதனால் கடற்படை முகாமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை திசைதிருப்பிவிட்டு மகிந்த உள்ளிட்ட குழுவினர் இந்த மாளிகைக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நாமல் ராஜபக்ஷவின் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரபரப்பப்பட்டு வருகின்றது.
மகிந்த இந்திய உலங்கு வானூர்தியில் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், சமுத்ரா என்ற கப்பலில் இந்தியாவுக்கு அவரை அழைத்து சென்றுவிட்டதாகவும் கூறி மக்களை திசை திருப்பியுள்ளனர்.
இதற்கிடையில் சர்வதேச ஊடகத்திடம் கருத்து வெளியிட்ட நாமல் நாட்டை விட்டு தப்பிச் செல்ல மாட்டார் என குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் மகிந்தவை காப்பாற்றும் திட்டங்களாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 21 மணி நேரம் முன்
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam