பொலிஸாரின் அடாவடித்தனம் அம்பலம் - ஆதாரத்தை வெளியிட்ட பல்கலைக்கழக மாணவர்கள்
இலங்கையில் பொலிஸார் ஏனைய நாட்களில் பயன்படுத்தும் கண்ணீர் புகைக்கு பதிலாக புதிதாக ஒன்றை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏனைய நாட்களில் பொலிஸார் பயன்படுத்தும் கண்ணீர் புகை ஒரு துண்டாகும். அது ஒரு ஒற்றை குப்பி என தெரிவிக்கப்படுகின்றது. அதனை கையால் பிடித்து வீச முடியும்.
எனினும் நேற்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வீசிய கண்ணீர் புகை குண்டுகள்3 துண்டுகளாக உடைவதாக தெரியவந்துள்ளது. உடைந்து அதில் இருந்து வாயு வெளியேறுகின்றது.
இது வழமையான கண்ணீர் புகையை விடவும் அதிக வலுவானது. அவ்வாறு பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் போது முடிந்தளவு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாணவர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக தண்ணீரால் கழுவிவிட வேண்டும். இந்த கண்ணீர் புகை குண்டு பிணை கைதிகளை விடுவிப்பது போன்ற விடயங்களுக்கே பயன்படுத்தப்படும்.
இது மிகவும் வலுவாதென்பதனால் நீண்ட நேரம் காற்றில் கலந்திருக்கும். ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர்கள் மீது வீசிய கண்ணீர் புகை குண்டுகளை அவர்கள் கைகளை பிடித்து மீண்டும் பொலிஸார் மீது வீசியதனால் புதிய வகை கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
N 500 - CS Gas Hand Grenade எனப்படும் இந்த கண்ணீர் புகை குண்டு கொரியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மருந்து, எரிபொருள் கொண்டு வருவதற்கு பணம் இல்லை என அரசாங்கம் கூறுகின்ற போதிலும் கண்ணீர் புகை குண்டு கொண்டு வருவதற்கு பணம் உள்ளதா என பல்கலைக்கழக மாணவர்கள் பேஸ்புக் பக்கங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.


