இலங்கையின் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில்
பொருளாதரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து மீளவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் வைத்து நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார பிரச்சினை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை. அடுத்த தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் முக்கியப் பிரச்சினையாக பேசப்படும்.
பொருளாதாரத்தைக் கையாளும் திறன் உள்ளவர்களே ஆட்சிக்கு வரவேண்டும். தொலைநோக்குப் பார்வையே பிரதானமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து மீளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |