இலங்கை மக்களை வதைக்கும் நெருக்கடி நிலை! உணவுப் பொருட்களின் விலை வேகமாக உயர்கிறது
நாளுக்கு நாள் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருகின்றன.
மழை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மரக்கறிகளின் விநியோகமும் தடைபடுவதுடன், அவற்றின் விலையும் வேகமாக உயர்ந்து வருகின்றது.
விலை உயர்விற்கு முக்கிய காரணம்
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொருளாதார நிலையங்கள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு மரக்கறிகள் கையிருப்பு கிடைக்காமையே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார மையங்களுக்கு மரக்கறிகள் வரத்து குறைந்து, அனைத்து மரக்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மட்டுமின்றி, மழைக்காலம் துவங்கியுள்ளதால், பொருளாதார மையங்களுக்கு மரக்கறிகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஏற்படும் சிரமம்
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், காய்கறிகளின் கையிருப்பு குறைந்து வருவதால், நுகர்வோர் அன்றாடம் வாழ்வதற்கும், வாழ்வாதாரத்தை நடத்துவதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam